கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 சிலைகள் பறிமுதல் : கடத்த முயன்றவை ஐம்போன் சிலைகளா? என விசாரணை
Sep 17 2019 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 அடி உயர நடராஜர் உள்ளிட்ட 3 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை மற்றும் 6 அடி உயரமுள்ள 2 துவார பாலகர் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் விசாரணை நடத்தினர். கும்பகோணத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் விற்பனை நிலையத்திற்கு சிலைகள் கொண்டு செல்லப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகளா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.