திண்டுக்கல்லில் குறைதீர்ப்பு முகாமில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளி : பூர்வீக சொத்தில் பங்கு தராமல் சகோதரர் ஏமாற்றிவருவதால் அதிருப்தி
Sep 17 2019 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியான வெங்கடாச்சலம் என்பவர், தனது பூர்வீக சொத்தை தனது சகோதரர் அனுபவித்து வருவதாகவும், அதில் தனக்கு பங்கு தராமல் விரட்டிவிட்டதாகவும் கூறி, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள், அவரை தடுத்து தண்ணீர் ஊற்றி, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதேபோல், நத்தம் சிறுகுடி பகுதியைச் சேர்ந்த ஆசை பொண்ணு என்ற பெண், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, சிறுகுடி பகுதியில் 24 மணிநேரமும் மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.