காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூரை தொகுதியில் அனுமதிக்காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு
Sep 22 2019 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் திரு.மாணிக்கம் தாக்கூர் தொகுதிக்குள் வந்தால், அவரை விரட்டியடியுங்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு வராமலேயே திமுகவின் பொய்யான வாக்குறுதிகளால் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. திரு.மாணிக்கம் தாக்கூர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட தொகுதி பக்கம் வராமல், டெல்லியில் வசித்து வருவதாக விமர்சித்தார். திரு.மாணிக்கம் தாக்கூர் தொகுதிக்கு வந்தால், உயிர் போகாதவாறு ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி சுடுங்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்தாக்கூரை தரக்குறைவாக பேசியிருப்பது அக்கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.