நெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்
Sep 22 2019 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி, நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில், தேர்தலின் போது அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள்; பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கினார். இந்த கூட்டத்தில், அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.