வாங்கிய கடனுக்கும் மேலாக பணத்தை திருப்பி செலுத்தக் கூறி, மிரட்டல் - காவல் ஆய்வாளரின் மனைவி உட்பட 4 பேர் கந்துவட்டி தடுப்பு வழக்கில் கைது

Sep 22 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் வாங்கிய கடனுக்கு இரு மடங்காக பணத்தை திருப்பி செலுத்தக் கூறி, மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளரின் மனைவி உட்பட 4 பேர் கந்துவட்டி தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை நடராஜ நகரை சேர்ந்தவர் உமா முருகன். இவர் மதுரை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பெத்தானியாபுரத்தை சேர்ந்த தவசி என்பவரிடம் 63 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், இதற்காக ஒன்றரை கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்திய நிலையில், வாங்கிய கடனை திரும்ப கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு சொந்தமான இடத்தை எழுதி வாங்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தவசி அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் ராதா மற்றும் பிரேமா ஆகிய 4 பேர் மீது கந்துவட்டி தடுப்பு வழக்கில் வழக்குப் பதிவு செய்தனர். கைதான ராதா மதுரை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் தினகரன் என்பவரின் மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00