தாமிரபரணி ஆற்றங்கரையில் சிங்கமுக யாழி சிற்பம் : பாண்டிய மன்னர் கால சிற்பம் கண்டெடுப்பு - முறையாக அகழ்வாராய்ச்சி தேவை என பொதுமக்கள் வலியுறுத்தல்
Sep 22 2019 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டிய மன்னர் கால சிங்கமுக யாழி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் கடும் வறட்சியால் நீர் வற்றியது. இதனால் பாண்டிய மன்னர்கள் காலக் கட்டிடங்கள், முதுமக்கள் தாழிகள், எலும்புத் துண்டுகள், கல்லாலான நங்கூரம் ஆகியவை கண்டறியப்பட்டன. அதனைத்தொடர்ந்து இன்று முக்காணியில் பாண்டிய மன்னர் கால சிங்கமுக யாழி சிற்பம் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் தமிழர்களின் வரலாற்று சான்றுகளை ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதனை உலகறியச் செய்வதற்காக மழைக்காலம் தொடங்குவற்கு முன்பே முறையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.