120 சவரன் நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது - மத்தியப் பிரதேசத்தில் சுற்றிவளைத்த காவல்துறை
Sep 22 2019 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில், 120 சவரன் நகைகளை திருடிய 10 பேர் கொண்ட வடமாநிலக் கும்பலை, மத்தியப் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ், அண்மையில் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன் தினம், வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 120 சவரன் நகை, வைர நெக்லஸ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொள்ளை கும்பல் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மத்தியப்பிரதேசத்திற்கு புறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த கமல் பாட்டி, ராய் மால்,
ராம் நிவாஸ், கைலாஸ் பதி, ஹவுரவ், ஹாடு, சாவாரியா
பாபுலு, ராம்டா, முயா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, சென்னை அழைத்து வருவதற்காக தனிப்படை அங்கு விரைந்துள்ளது.