நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் காவலர் தாக்‍கப்பட்ட சம்பவம் - அமைச்சரின் கணவர் உட்பட 10 பேர் மீது வழக்‍குப்பதிவு

Sep 23 2019 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலியில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, அமைச்சரின் கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமைச்சர் ராஜலெட்சுமியின் உறவினர்கள் தங்கத்துரை, சங்கர் ஆகியோர் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக இருவரையும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த அமைச்சரின் கணவர் முருகன் தலைமையிலான கும்பல், மது போதையில் இருந்த நபர்களை அழைத்து சென்றுள்ளனர். இதனை தடுத்த காவலர்கள் மகேஷ்குமார், செந்தில், டேவிட்ராஜ் ஆகியோர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, தாக்குதலுக்குள்ளான செந்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில், அமைச்சரின் கணவர் முருகன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00