திருவாரூரில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : கார், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின
Sep 23 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில், தனியார் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வீச்சில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின.
மன்னார்குடி நடராஜர்பிள்ளை தெருவில் உள்ள நடராஜன் என்பவர், நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை மற்றும் பாலம் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் நடராஜனின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தொழில் ரீதியான முன்விரோதம் காரணமாக, மர்மநபர்கள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.