ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது
Sep 23 2019 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த வாரம் ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த வாரம் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலரால் நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர்கள் தப்பியோடியதையடுத்து, இதுதொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஏற்கெனவே அறிவழகன் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நிலையில், அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வினோத், பாலாஜி ஆகிய இருவரை இன்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.