பாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாம் - ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்
Sep 23 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாமை தொடங்கியிருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானிலிருந்து அவர்களை இயக்குபவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் மக்களிடையே தகவல் தொடர்பு இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும், இந்திய ராணுவப்படையினர் அவர்களது முயற்சியை முறியறித்து வருவதாகவும் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.