தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்
Sep 23 2019 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில், இன்று முதல் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக, செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு, விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் இருப்பதாகவும், 275 மைங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். இரு தொகுதிகளிலும் இன்று முதல் 3 பறக்கும் படை மற்றும் 3 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து வாக்கு மையங்களிலும், வாக்குப்பதிவு இந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திரு.சத்யபிரத சாகு தெரிவித்தார்.