கனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்

Sep 23 2019 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக, தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க., சார்பில், திருமதி. கனிமொழியும், பா.ஜ.க., சார்பில், திருமதி. தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். இதில், திருமதி. கனிமொழி வெற்றி பெற்றார்.

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கனிமொழியின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருந்ததாகவும், அவற்றை சுட்டிக்காட்டிய பின்னரும் கூட, தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றும் தமிழிசை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை திரும்பப்பெறுவதாக தமிழிசை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்‍கப்பட்டது.

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்றும், அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டீசை அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை அடுத்த மாதம் 14-ம் ‍தேதிக்கு ஒத்தி வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00