கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு
Sep 30 2019 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல வண்ண காகிதங்களைப் பயன்படுத்தி கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
குழந்தைகளின் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில், திருப்பூர் அருகே உள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் உலக சாதனை கலாம் புக் ஆப் ரெக்கார்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வில் 19 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புத் திறனை வெளிப்படுத்தினர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பல வண்ண காகிதங்களை பயன்படுத்தி குருவிக் கூடு, வால் ஹாங்கிங், காய்கறி தோரணங்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட கண்கவர் கைவினைப் பொருட்களை தயாரித்துள்ளனர். 7 மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 60 மாணவர்கள் பங்கேற்று இந்த கைவினைப் பொருட்களை தயாரித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு கலாம் புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.