விஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு
Oct 10 2019 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துப்புரவு பணியாளர்களை, விஷவாயு தாக்குதலில் இருந்து காக்கும் கருவியை தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
தமிழகத்தில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போதும், ஆழ்கிணறுகளில் இறங்கி தூர்வாரும்போதும், விஷவாயு தாக்கி பலர் இறக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்திய அளவில் விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவத்தில் தமிழகம் 45 சதவீதம் பெற்று முதலிடத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை தடுத்திடும் வகையில் பொறியியல் கல்வி படித்து முடித்த மாணவர் அமிர்தகணேசன் தஞ்சையில் இக்கருவியினைக் கண்டு பிடித்துள்ளார். இக்கருவியினை கழிவு நீர் தொட்டியில் செலுத்தும் போது உள்ளே இருக்கும் விஷவாயு, பூமிக்கு மேல வெளியேற்றப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.