தமிழகத்தில் புதிதாக மூன்று சேவை துவக்கி வைப்பு : காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்
Oct 15 2019 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புதிதாக மூன்று பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், திபாவளியை முன்னிட்டு கோவை முதல் ஹௌரா வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவையில் இருந்து பழனிக்கு இயக்கப்படும் புதிய பயணியர் ரயில் மதியம் 1.45 மணிக்குபுறப்பட்டு மாலை நாலு 4.15 மணிக்கு பழனி சென்றடையும். இதேபோன்று பழனியில் இருந்து இயக்கப்படும் ரயில் 10.45க்கு புறப்பட்டு மதியம் ரெண்டு மணியளவில் கோவை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, புஸ்பத்தூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் காலை 7.30மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு கோவை வந்தடையும்.இதேபோன்று கோவையில் 5.40 மணிக்கு புறப்படும் ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் நின்று இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.