விருதுநகர் மாவட்டம் அருப்புக்‍கோட்டை அருகே 3 ஆண்டுகளாக சீர்செய்யப்படாத அடிப்படை வசதிகள் - புகார்கள் பல அளித்தும் அதிகாரிகள் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என பொதுமக்‍கள் வேதனை

Oct 15 2019 9:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் அருப்புக்‍கோட்டை அருகே, சாலை, குடிநீர், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில், மேலத்தெரு மற்றும் மகாத்மா காந்தி நகர் பகுதிகளில் 300-க்‍கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட காலமாக சாலை, குடிநீர், மின் விளக்குகள் ஏதுமின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். 3 ஆண்டுகளாக பழுது சீர்செய்யப்படாமல் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி - குண்டும் குழியுமாக காணப்படும் சாலை - செயல்படாத தெரு விளக்குகள் என பல்வேறு புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்‍கையே இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சேகரிக்‍கப்படும் குப்பைகள் பாளையம்பட்டி ஊராட்சியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00