விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 3 ஆண்டுகளாக சீர்செய்யப்படாத அடிப்படை வசதிகள் - புகார்கள் பல அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை
Oct 15 2019 9:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, சாலை, குடிநீர், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில், மேலத்தெரு மற்றும் மகாத்மா காந்தி நகர் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட காலமாக சாலை, குடிநீர், மின் விளக்குகள் ஏதுமின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 3 ஆண்டுகளாக பழுது சீர்செய்யப்படாமல் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி - குண்டும் குழியுமாக காணப்படும் சாலை - செயல்படாத தெரு விளக்குகள் என பல்வேறு புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கையே இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பாளையம்பட்டி ஊராட்சியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.