துரோகிகளுடன் எந்தக் காலத்திலும் இணையமாட்டோம் - டிடிவி தினகரன் பேட்டி
Oct 16 2019 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துரோகம் செய்தவர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை சீமான் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினார். தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ததும், அனைத்துத் தேர்தல்களிலும் கழகம் போட்டியிடும் என்றும் திரு. டிடிவி தினகரன் கூறினார்.