பிரதமர் மோடியுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு
Oct 16 2019 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, டில்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மயில் சின்னம் கொண்ட பரிசுப் பொருளை வழங்கினார். அத்துடன், பிரதமரிடம் சில நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மரக்கன்று ஒன்றை பரிசாக கொடுத்தார். தமிழிசை ஆளுநராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக மோடி மற்றும் அமித் ஷாவை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.