தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம் - ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்பு
Oct 16 2019 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை, 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால், உப்பளங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1 லட்சம் உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். உற்பத்தி நிறுத்தத்தால், உப்பின் விலை உயர வாய்ப்பு உள்ளது.