வால்பாறை அருகே முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்று தோற்றுப்போன சிறுத்தை - முள்ளம்பன்றியின் துணிச்சலான எதிர்ப்பால் முகத்தில் காயங்களுடன் சிறுத்தை தப்பி ஓடிய வீடியோ காட்சிகள்
Oct 16 2019 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு மலைப்பாதையில் முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்ற சிறுத்தை, முகத்தில் காயங்களுடன் தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
வால்பாறையிலிருந்து கேரளாவின் சாலக்குடிக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. நேற்று மாலை அவ்வழியாக ஒரு சுற்றுலாப் பயணி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முள்ளம்பன்றியை வேட்டையாட சிறுத்தை தீவிர முயற்சி மேற்கொண்டது. தனது உடலில் உள்ள முட்களைக் கொண்டு சிறுத்தைக்கு எதிராக முள்ளம்பன்றி துணிச்சலுடன் கடுமையாக சண்டையிட்டது.
இந்தக் காட்சிகளை அந்தச் சுற்றுலாப் பயணி தனது செல்போன் மூலம் பதிவு செய்தார். இறுதியில் முகத்தில் ரத்த காயங்களுடன் தனது முயற்சியை கைவிட்டு சிறுத்தை அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளன.