மக்‍கள் எளிமையான முறையில் வாழ்ந்தால் நாட்டில் ஊழல் ஒழுந்துவிடும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

Oct 19 2019 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லா மனிதர்களும் எளிமையான முறையில் வாழ்ந்தாலே, நாட்டில் ஊழல் என்பது இருக்காது என ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு துறைகளில் பொதுமக்களுக்கு சேவை புரிந்தவர்களுக்கு சேவா ரத்னா விருதுகளை ஆளுனர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயநலம் இல்லாமல் சேவை புரியும்போது நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறினார். மகாத்மா காந்தியின் கருத்துகளை நாம் அனைவரும் மறந்துவிட்டதாக தெரிவித்த அவர், மக்‍கள் எளிய முறையில் வாழ்ந்தாலே, நாட்டில் ஊழல் என்பது இருக்காது எனக்‍ கூறினார்.

தமிழ் இனிமையான மொழி என்று தமிழில் கூறிய ஆளுநர், தான் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00