மக்கள் எளிமையான முறையில் வாழ்ந்தால் நாட்டில் ஊழல் ஒழுந்துவிடும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து
Oct 19 2019 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்லா மனிதர்களும் எளிமையான முறையில் வாழ்ந்தாலே, நாட்டில் ஊழல் என்பது இருக்காது என ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு துறைகளில் பொதுமக்களுக்கு சேவை புரிந்தவர்களுக்கு சேவா ரத்னா விருதுகளை ஆளுனர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயநலம் இல்லாமல் சேவை புரியும்போது நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறினார். மகாத்மா காந்தியின் கருத்துகளை நாம் அனைவரும் மறந்துவிட்டதாக தெரிவித்த அவர், மக்கள் எளிய முறையில் வாழ்ந்தாலே, நாட்டில் ஊழல் என்பது இருக்காது எனக் கூறினார்.
தமிழ் இனிமையான மொழி என்று தமிழில் கூறிய ஆளுநர், தான் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.