முரசொலி அலுவலகத்திற்கான நிலம் வாங்கப்பட்டதில் 20 ஆண்டுகளுக்கான மர்மம் மறைக்கப்படுவது ஏன்? : மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி
Oct 19 2019 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முரசொலி அலுவலகத்திற்கான நிலம் வாங்கப்பட்டதில் 20 ஆண்டுகளுக்கான மர்மம் மறைக்கப்படுவது ஏன்? என, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சமி நிலத்தில் தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதுகுறித்து ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டிருந்த ஆவணங்கள் குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் இருந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த ஆதி திராவிடர் நல விடுதி எங்கே எனக் கேட்டுள்ளார். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாக திரு. ஸ்டாலின் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், இதற்கு வேண்டிய நிலப்பரப்பு ஆவணம் எங்கே என்றும், அந்த ஆவணம் உரிமையாளரிடமே இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.