நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Oct 19 2019 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள், இன்று முதல் பணி அமர்த்தப்படவுள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இரு தொகுதிகளிலும் இதுவரை, 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சீமான் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். மேலும், இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பார்வையாளர்கள் இன்று முதல் பணி அமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.