கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணின் இரு கால்களும் அகற்றப்பட வேண்டிய பரிதாபம்

Nov 12 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணின் இரு கால்களும் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் விழுந்த சம்பவத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேனர் வைத்த ஜெயகோபாலுக்‍கு, நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவையில், அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில், 22 வயதான ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணின் 2 கால்களும் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் திரு.பழனிசாமியின் வருகையை ஒட்டி, கோவை பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் அதிமுக கட்சிக் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அப்போது, அந்த வழியாக வந்த இளம்பெண் ராஜேஸ்வரியின் இருசக்‍கர வாகனத்திற்கு முன்னே, கொடிகம்பம் விழுந்த நிலையில், பின்னே வந்த லாரி மோதியதில், அவரின் கால்கள் நசுங்கின. இதனால் பலத்த காயமடைந்த கால்கள் இரண்டையும் அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00