கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 83வது நினைவு நாள் : வரும் 18ம் தேதி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை
Nov 12 2019 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 83வது நினைவு நாளையொட்டி, வரும் 18ம் தேதி திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழர், தேச விடுதலைப் போராட்டத்தில் செக்கிழுத்த செம்மல், தியாகி வ.உ. சிதம்பரனாரின் 83வது நினைவு நாள் வரும் 18ம் தேதி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் அமையப் பெற்றுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு 18ம் தேதி காலை 10.30 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.