6 கோடி ரூபாய் பண மோசடி - நடிகர் அதர்வா மீது திரைப்பட தயாரிப்பாளர் புகார்

Nov 12 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக்‍ கூறி, திரைப்பட தயாரிப்பாளர், ​சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் அதார்வா தயாரித்து நடித்து வெளியான "செம போத ஆகாதே" திரைப்படத்தின் விநியோகஸ்தர் உரிமையை, மதியழகன் என்பவர் ஐந்தரை கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளார். திரைப்படம் வெளியாக தாமதம் ஆனதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதார்வாவிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதாவும், அதர்வாவை வரவழைத்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போது, நஷ்டத்திற்கு ஈடாக பணம் இல்லாமல், படம் நடித்து தருவதாகவும் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் 50 லட்சம் ரூபாய் செலவில், "மின்னல் வீரன்" என்ற படத்தை அதர்வா வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தையும் அதர்வா முடித்து தராமல் ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் 6 கோடி ரூபாய் வரை நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும், இது தொடர்பாக நஷ்ட தொகையை கேட்டபோது 3 மாதத்தில் தருவதாகவும் கூறினார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணம் தராததால் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00