தூக்கில் தொங்கி உயிருக்குப் போராடிய பள்ளி சிறுவனை, சாதுர்யமாக காப்பாற்றிய சக மாணவர் - ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு
Nov 12 2019 7:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனக்கவலை காரணமாக, தூக்கில் தொங்கிய பள்ளி சிறுவனை, சாதுர்யமாக காப்பாற்றிய சக மாணவனுக்கு, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து, பரிசும் வழங்கினார்.
கமுதியை அடுத்த கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்காக, புளிய மரத்தில் ஏறி தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. அதனை பார்த்த வடிவேல் என்ற மற்றொரு சிறுவன், துரிதமாக செயல்பட்டு, அந்த மரத்தில் ஏறி, தூக்குமாட்டிய துணி கழுத்தை இறுக்குவதற்கு முன்பு, தூக்கி நிறுத்தி விட்டு குரல் எழுப்பவே, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மரத்தில் ஏறி, சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமயோசிதமாக செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றிய வடிவேலுவை, நேரில் அழைத்து பாராட்டியதுடன், புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.