சென்னையில் நீண்ட நாட்களாக சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீர் - வி.ஐ.பி.க்கள் செல்லும் முக்கிய சாலையிலேயே அலட்சியம் காட்டும் மாநகராட்சி
Nov 12 2019 7:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதி பேருந்து நிலையம் ஒட்டிய முக்கிய சாலையில், கடந்த சில மாதங்களாக கழிவு நீர் தேங்குவதால், பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரை ஒட்டிய காமராஜர் சாலையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம் என முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அகில இந்திய வானொலி நிலையத்தின் எதிரேயுள்ள பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில், மழைக்காலம் தொடங்கியதில் இருந்து, கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும், அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீரால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, அப்பகுதி மக்களிடையே நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றன. நீதிபதிகள், அமைச்சர்கள் என வி.ஐ.பி.க்கள் செல்லும் இச்சாலையிலேயே, மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.