சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே குவிந்துள்ள குப்பைகள் : தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Nov 12 2019 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடுத்த பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை வழியாக திருமுடிவாக்கம், குன்றத்தூர் செல்லும் சாலையில், குப்பை கழிவுகள் குவியல் குவியலாக காணப்படுகிறன. பம்மல் நகராட்சி 21-வார்டு உட்பட்ட இப்பகுதியில் காணப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து
பம்மல் நகராட்சி சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அப்புறபடுத்துமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.