மதுரையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும் : வட்டாட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Nov 13 2019 9:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து வட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
வைகை அணையிலிருந்து வெளியாகும் உபரி நீரைக் கொண்டு 58 கிராம கால்வாய்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி, 58 கிராம பாசன சங்கத்தினருடன் இணைந்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை கேட்டு திடீரென கூட்டத்தைப் புறக்கணித்து வட்டாட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.