குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 2ம் நாளாக இன்றும் மலை ரயில் போக்குவரத்து ரத்து - பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்
Nov 13 2019 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் இன்று 2-வது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆர்டலி ஹில் குரோ ரயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமானது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்ற மலை ரயில் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.