பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Nov 13 2019 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டிய நிலையில், உபரி நீரானது பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.