மழலை மொழியில் மாணிக்கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அடிபிறழாமல் கூறி அசத்தல்
Nov 14 2019 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை சிறுமி ஒருவர் மழலை மொழியில் கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - காயத்ரி தம்பதியின் குழந்தை சரசு பாரதி. இச்சிறுமி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். 4 வயது கூட நிரம்பாத இக்குழந்தை மாணிக்கவாசகர் எழுதிய சிவபுராணத்தில் உள்ள 95 வரிகளையும் அடிபிறழாமல் கூறி அசத்தி வருகிறது. தனது மழலை மொழியில் அடிபிறழாமல் அச்சிறுமி சிவபுராணத்தை பாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.