வேலூர் சிறையில் உள்ள முருகனை நேரில் பார்க்கலாம் - நளினி மற்றும் உறவினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Nov 14 2019 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை, மனைவி நளினி மற்றும் உறவினர்கள் பார்த்து பேச அனுமதி வழங்கும்படி, சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனிமை சிறைக்கு மாற்றப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்ததால், முருகனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்-இதனால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும் -அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும் - தனிமை சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு அவரை மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பார்த்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.