டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
Nov 14 2019 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தரையில் புரண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த பனை ஓலப்பாடி கிராமத்தில் ஏற்கனவே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்னர் புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.