கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு
Nov 16 2019 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாபலிபுரத்தில் இருக்கும் கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து கல்லில் புதிய அறிவியல் கண்பிடிப்பு ஆய்வை நிகழ்த்தி நெல்லை பல்கலைக்கழக மாணவி சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள சிறுகுன்றின் மீது கீழே விழும் நிலையில் கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படும் பாறை அமைந்துள்ளது. மலை உயரத்தில் இந்த பாறை ஒட்டிக்கொண்டு இருக்கும் அதிசயம் இன்னமும் புலப்படாமல் உள்ளது. இதுகுறித்து நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி சுசிலா புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.
வெண்ணை பந்து பாறை மறுநிலையோ, கரைவு நிலையோ, சுருங்கு நிலையோ, விரிவு நிலையோ பெறவில்லை. ஆகையால் இது அழிவு நிலையும் பெறவில்லை என மாணவி சுசிலா தெரிவித்தார். இவரின் இந்த ஆய்வை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.