மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் அதிக அளவில் பரவும் மண்தூசு - கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
Nov 16 2019 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் மண்தூசு அதிக அளவில் பரவி கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்காக ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016ம் ஆண்டுமுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் நகர் முழுவதிலும் மண்தூசு அதிகளவில் பரவி கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையம், மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மணல் தூசு காரணமாக நோய் பரவி வருகிறது. மணல் தூசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு சுவாச பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.