பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் - உதயநிதி ஸ்டாலினுக்‍கு தேசிய எஸ்.சி-எஸ்.டி ஆணையம் நோட்டீஸ்

Nov 16 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சமி நில விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. முரசொலி இட விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்‍கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்‍குநருமான திரு.உதயநிதி ஸ்டாலினுக்‍கு, தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முரசொலி அலுவலக இட விவகாரம் குறித்து நேரில் விளக்‍கம் அளிக்‍க வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.முருகன், வரும் 19-ம் தேதி உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00