சென்னை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி - சோகத்தில் மூழ்கிய அம்பத்தூர் பகுதி மக்கள்
Nov 17 2019 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர், புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4 வயது மகள் கேத்வின், கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குறையாததால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.