கரூரில் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரி சோதனையின்போது 32 கோடி ரூபாய் ரொக்கம், 10 கிலோ தங்கம் பறிமுதல் - ஆலை உரிமையாளர் 21ம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்
Nov 19 2019 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் உள்ள சோபிகா இம்பெக்ஸ் கொசுவலைஏற்றுமதி நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கு மேற்பட்டோர் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திர். சோதனையில், கட்டுக் கட்டாக 32 கோடி ரூபாய் பணம், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 435 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 21-ஆம் தேதி திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சிவசாமி-க்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.