உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது தமிழக அரசு - மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு

Nov 19 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள சொத்து வரி உயர்வை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில், சொத்துவரியை உயர்த்தி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வாடகை கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்பட அனைத்திற்கும் 50 முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இந்த குழு ஆய்வு செய்து, அறிக்கை வழங்கும் வரை, நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்துவரி உயர்வுக்கு முன்பிருந்த வரியை செலுத்தினால் போதும் என்றும் அவர் தெரிவித்தார். கூடுதலாக செலுத்திய சொத்துவரி, வரும் அரையாண்டுகளுக்கான கணக்கில் ஈடுசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00