விசாரணை என்ற பெயரில் பெண்கள் மீது கொடூரத் தாக்‍குதல்- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காயமடைந்த பெண்கள் ஆட்சியரிடம் புகார்

Nov 19 2019 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் வழக்கு விசாரணை என்ற பெயரில் பெண்களை கொடூர முறையில், காவல்துரையினர் அடித்து துன்புறுத்தியது தொடர்பாக காயங்களுடன் வந்த பாதிக்‍கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அருந்ததியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள பெண்களையும் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமான முறையில் தாக்குவதாகவும், குழந்தைகளையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும், இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக ஊமச்சிகுளம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்‍கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

எந்த வழக்குகளிலும் தொடர்பு இல்லாத நிலையில் காவல்துறையினர் தங்களையும், பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00