திருச்சி நகைக்கடை, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு : சுரேஷின் நீதிமன்றக் காவல் 2 நாட்கள் நீட்டிப்பு
Nov 19 2019 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷின் போலீஸ் காவல், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான சுரேஷிற்கு, கடந்த ஜனவரி மாதம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன சுமார் 29 கிலோ நகைகளில், 26 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை குறித்து, சுரேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற வேறு சில கொள்ளைகளில் சுரேஷுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, பாலக்கரை மற்றும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.