குன்னூர் - மேட்டுபாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தாமதம் : மலை ரயில் சேவை வரும் 24-ம் தேதி வரை நிறுத்தம்
Nov 19 2019 8:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயான மலை ரயில் சேவை வரும் 24-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால், கடந்த 16-ம் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும், நிலையில் தொடர்மழை காரணமாக ரண்ணிமேடு முதல் ஹில்க்ரோ வரை மேலும் 6 இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்துள்ளன.
இதனால், தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயான மலை ரயில் போக்குவரத்து வரும் 24-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மலை ரயில் சேவை நிறுத்தத்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.