நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பை பிடித்த வனத்துறையினர் - பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு
Nov 20 2019 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பு பிடிபட்டது.
சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அமைய உள்ள பகுதியில் பாம்பு இருப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நாமக்கல் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், வனவர் தமிழ்வேந்தன், வனக்காப்பாளர்கள் பாலசுப்ரமணியன், மணிகண்டன் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பதுங்கியிருந்த பாம்பினை மீட்டனர். அது சுமார் மூன்றரை அடி நீளம் கொண்ட அரியவகை மண்ணுளி பாம்பு வகை என்பது தெரியவந்தது. இத்னையடுத்து அந்த பாம்பினை பத்திரமாக மீட்டு காரவள்ளி கோம்பை காப்புக்காட்டில் விட்டனர்.