திருச்சி திருவெறும்பூர் அருகே அரசு மதுபான கிடங்குக்கு வந்த இரண்டு சரக்கு லாரிகள் தீப்பற்றியதில் முற்றிலும் சேதம்
Nov 20 2019 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி திருவெறும்பூர் அருகே அரசு மதுபான கிடங்குக்கு வந்த இரண்டு சரக்கு லாரிகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி திருவெறும்பூர் அருகே அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த மதுபான கிடங்கிலிருந்து திருச்சி மண்டலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுபான கிடங்கிலிருந்து வழக்கம்போல லாரிகள் மதுபான வகைகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு லாரியின் என்ஜின் அதிக வெப்பத்தினால் மின்கசிவு ஏற்பட்டு லாரி தீப்பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைத்திருந்த மற்றொரு லாரிக்கும் தீ வேகமாக பரவியது. மளமளவென தீ பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் அதனை அணைக்க முயற்சித்தும் முடியாமல் போனதால், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். 12 தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர். இருப்பினும் 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் ஆகின.