காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை - நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Nov 20 2019 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், நங்கநல்லூர், அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை கொட்டியது. இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.