தூக்கி வீசப்படும் பொருட்களில் மிளிரும் கலைநயம் : பட்டதாரி இளைஞரின் முயற்சிக்கு வரவேற்பு
Nov 28 2019 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பொருட்களை கொண்டு கலை நயமிக்க பொருட்களை செய்து அசத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பொன்சிங். இவர் பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பொருட்களைக் கொண்டு கலை நயமிக்க பூச்செடிகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை உருவாக்கி வருகிறார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 40 பள்ளிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இதுகுறித்த பயிற்சியையும் அளித்து வருகிறார். மன அழுத்தத்தில் இருந்துவிடுபடும் வகையில் இளைஞர் பொன்சிங் செய்துவரும் இந்த வித்தியாச முயற்சிக்கு அப்பகுதியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.