சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு
Dec 7 2019 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், சேலையூர், மீனம்பாக்கம், திரிசூலம், ஆலந்தூர், பழவந்தாங்கல், நங்கநல்லூர் மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பழவந்தாங்கல் ரயில்வே பாலத்தின் மழை நீர் தேங்கி தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் சென்னையையொட்டிய செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்கிறது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிகாலையிலிருந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. திருவள்ளூர், திருத்தணி, பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.